Posts

Showing posts from October, 2019

புத்தரின் பொன்மொழிகள் #1

Image
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை.  – கௌதம புத்தர் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும். – கௌதம புத்தர் தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும். – கௌதம புத்தர் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும். – கௌதம புத்தர் வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட,  ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,   ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும். – கௌதம புத்தர் தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது. – கௌதம புத்தர் மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,   தான் என்ன செய்யப்...

புத்தரின் பொன்மொழிகள் #2

Image
அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை.  - கௌதம புத்தர் நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை.  எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன். – கௌதம புத்தர் எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள். -கௌதம புத்தர் பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான்.  அமைதிக்கான உறுதியும் அதுவே. -கௌதம புத்தர் உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்  மனம் மயங்குவதில்லை. -கௌதம புத்தர் உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர் தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர் தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர் உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர் உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம...

புத்தரின் பொன்மொழிகள் #3

Image
கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர் துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே. -கௌதம புத்தர் பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர் கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை. - கௌதம புத்தர் ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும். .குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம புத்தர் நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார். -கௌதம புத்தர் பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன. -கௌதம புத்தர் பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,...

புத்தரின் பொன்மொழிகள் #4

Image
உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், மாற்றான் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள். - கௌதம புத்தர் எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.-கௌதம புத்தர் பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.-கௌதம புத்தர் அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.-கௌதம புத்தர் மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.-கௌதம புத்தர் ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செயலிலும் செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவை ஆகும்.- கௌதம புத்தர் புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன்  இரண்டிடங்களி...

புத்தரின் பொன்மொழிகள் #5

Image
வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். -கௌதம புத்தர் வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும். – கௌதம புத்தர் மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும். - கௌதம புத்தர் பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான். - கௌதம புத்தர் அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட,  அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - கௌதம புத்தர் கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர் குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்...

புத்தரின் பொன்மொழிகள் #6

Image
ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.- கௌதம புத்தர் வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால்,  கர்வம் காணாமல் போய் விடும்.- கௌதம புத்தர் தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு. - கௌதம புத்தர் சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம்.  - கௌதம புத்தர் குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல,  தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும்,  ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான். - கௌதம புத்தர் ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். - கௌதம புத்தர் ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது." - கௌதம புத்தர் அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வ...

புத்தரின் பொன்மொழிகள் #7

Image
உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும். - கௌதம புத்தர் தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும். - கௌதம புத்தர்   ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது. - கௌதம புத்தர் எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. - கௌதம புத்தர் எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்."  - கௌதம புத்தர் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது." - கௌதம புத்தர் கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை." - கௌதம புத்தர் ஒன்றும் தெரியாது என்று நினைப்ப...